புழுதிவயலில் இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று வெள்ளிக் கிழமை (06.09.2013) இரவு எட்டு மணியளவில் புழுதிவயல் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்றது.
இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் சிரேஷ்ட அமைச்சர் பௌஸி அவர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு புத்தளம் தொகுதி அமைப்பாளர் K.B. பாயிஸ் அவர்களும், வடமேல் மாகாண சபைத்தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களான ஆப்தீன் எஹியா, T.M. தாஹிர், சனத் நிசாந்த ஆகியோரும் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினரான S.H.M. முஸம்மில் அவர்களும் புழுதிவயல் ஜும்;ஆப் பள்ளி நிர்வாக சபைத் தலைவர் ஜனாப் அபுல் ஹுதா அவர்களும் மற்றும் ஊர் பிரமுகர்களும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர். காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் மழையோடு மழையான சூழ்நிலையில் தான் இந்தக் கூட்டம் இடம்பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.