Friday, October 18, 2013

கரம்பையில் இடம் பெற்ற விபத்தில் இருவா் பலி, 15 போ் காயம்.

புத்தளம் கல்பிட்டி பிரதான வீதியின் கரம்பை பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்து மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

​வேன் ஒன்று லொறியொன்றுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும் அடங்குகின்றார். தலவில பகுதியலுள்ள வழிபாட்டுத்தலமொன்றுக்கு சென்று திரும்பிய வேன் ஒன்றே லொறியுடன் மோதியுள்ளது.

இரண்டு வாகனங்களினதும் சாரதிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படங்கள் உதவி லங்காதீப





 
Disqus Comments