ஹஜ்ஜின் உச்சகட்ட நிகழ்வான அரஃபா பிரார்த்தனை நேற்று முன்தினம் நடைபெற்றது. சுமார் 2
மில்லியன் ஹாஜிகள் உலகெங்கிலுமிருந்து அரஃபா மைதானத்தில் ஒன்று கூடினர்.
ஹாஜிகள் கேட்கும் அனைத்து துஆவும் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படும் இந்த
முக்கிய இடத்தில், ஹாஜிகள் அனைவரும் கண்ணீர் விட்டு துஆ கேட்டனர்.
மேலும் அன்றைய நன்பகல் இமாம் சேக் அப்துல் அஜீஸ்பின் அப்துல்லாஹ் அவர்கள்
ஆற்றிய குத்பா உரையில், "உலக முஸ்லிம்கள் அனைவரும் வேற்றுமைகளை களைந்து,
ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
உலக முஸ்லிம்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பிளவுகள் மற்றும் எதிரிகளிடமிருந்து
வரும் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு கோரி அல்லாஹ்விடம் பிரார்த்னை
மேற்கொள்ளுமாறும் அவரது உரையில் வேண்டுகோள் வைத்தார்.