பிலிப்பைன்சில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகிய இந்த
நிலநடுக்கத்திற்கு, இதுவரை 6 பேர் பலியாகியிருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தினால் சீபு மாகாணத்தில்
கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள மீன்பிடி
துறைமுகம் முற்றிலுமாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது.