Tuesday, October 8, 2013

அதிபா் மீது தாக்குதல் நடாத்திய 3 ஆசிரியைகள்

(SN) மாவனெல்லை – வேகன்தலை மகாவித்தியாலயத்தின் அதிபர் மீது நேற்று பிற்பகல் பாடசாலை நிறைவின் போது 3 ஆசிரியைகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அதிபர் பாடசாலையிலிருந்து வெளியேற தயாரான போது அவரின் அலுவலகத்திற்கு சென்ற ஆசிரியைகள் மூவர் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
மாவனெல்லை – வேகன்தலை மகா வித்தியாலயத்தின் அதிபர் கருத்து தெரிவிக்கையில், பாடசாலையில் ஒழுக்கயீனமான சில தினங்கள் செயற்பட்டமை காரணமாக குறித்த ஆசிரியைகளுக்கு அறிவுரை வழங்கியதாகவும், இதன்காரணமாக அவர்கள் மேலும் குழப்பம் விளைவிக்கும் வகையிலும் செயற்பட்டதாக குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபராலும், 3 ஆசிரியைகளாலும் காவல்நிலையத்தில் 2 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவனெல்லை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்;.
குறித் பாடசாலையில் நிலவும் நிர்வாக முரண்பாடே சம்பவத்திற்கு காரணம் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இடம்பெற்ற முறுகல் நிலை தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக மாவனெல்லை வலய கல்விப் பணிப்பாளர் தெமலகிரியே அனோமதஸ்ஸ தெரிவித்துள்ளார்.
Disqus Comments