விளக்கமறியலில் வைக்கப்பட்ட தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களில் 49 பேர் இன்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழத்தின் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் கடந்த வியாழக்கிழமை கைகலப்பு இடம்பெற்றது. இதனையடுத்து 53 மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டனர்.
குறித்த மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர். இதன்போது நான்கு பேர் தவிர்ந்த ஏனைய மாணவர்களை பிணையில் செல்லுமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டார்.தலா 50,000 ரூபா சரீரப் பிணையில் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டதுடன் டிசெம்பர் ஏழாம் திகதி மீண்டும் மன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
ஏனைய நான்கு மாணவர்களையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். தவறான தகவல்களை வழங்கியமையினாலேயே இவர்கள் நான்கு பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழத்தின் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் கடந்த வியாழக்கிழமை கைகலப்பு இடம்பெற்றது. இதனையடுத்து 53 மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டனர்.
குறித்த மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர். இதன்போது நான்கு பேர் தவிர்ந்த ஏனைய மாணவர்களை பிணையில் செல்லுமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டார்.தலா 50,000 ரூபா சரீரப் பிணையில் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டதுடன் டிசெம்பர் ஏழாம் திகதி மீண்டும் மன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
ஏனைய நான்கு மாணவர்களையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். தவறான தகவல்களை வழங்கியமையினாலேயே இவர்கள் நான்கு பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.