Wednesday, October 16, 2013

உலக உணவு தினம் - பட்டினியில் இலங்கைக்கு 43 ஆவது இடம்

உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ம் திகதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. 

'பட்டினி'யில் ஆபத்தான நிலையில் தற்போதும் இலங்கை உள்ளதாகவும் 2013 பட்டினி சுட்டியில் இலங்கை 43 ஆவது இடத்திலுள்ளது என்றும் அந்த சுட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்மட்டத்திலிருந்து முன்னேறி உலக பட்டினி சுட்டி  2013 இல் 63 ஆம் இடத்துக்கு வந்துள்ள இந்தியாவில் பட்டினி கிடப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

எனினும் அது சீன, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு கீழேயே உள்ளது.

உலக பட்டினி சுட்டியில் சீனா,பட்டினி மட்டத்தில் 6ஆம் இடத்தில் உள்ளது. இலங்கை 43 ஆவது, பாகிஸ்தான் 57ஆவது, பங்களாதேஷ் 58 ஆவது இடங்களை பெற்று கடுமையான பட்டினி மட்டத்திலிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த சுட்டி 120 அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பட்டினி மட்டத்தை காட்டுகின்றது. இந்த சுட்டியை தயாரிக்கும் போது மந்த போஷனை உடையோரின் விகிதாசாரம்இ ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளில் நிறை குறைந்த பிள்ளைகளின் விகிதாசாரம்இ ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் மரண வீதம் ஆகிய மூன்றும் சம அளவில் கருத்தில் எடுக்கப்பட்டன
Disqus Comments