Tuesday, October 1, 2013

ஈராக்கில் செப். மாத வன்முறையில் மட்டும் 979 பேர் பலி! 2133 பேர் படுகாயம்!

ஈராக்கில் கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் மொத்தம் 979 பேர் பலியானதாக ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது. 
 
2008ஆம் ஆண்டு முதல் ஈராக்கின் பல நகரங்களில் சன்னி, சியா பிரிவினரிடையே தொடர் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் மட்டும் குண்டு வெடிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் 979 பேர் பலியாகி உள்ளனர். இதில் பாக்தாத்தில் மட்டும் 418 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த செப்டம்பர் மாத வன்முறைகளில் 2133 பேர் படுகாயமடைந்துள்ளனர். இருப்பினும் கடந்த ஜூலை மாதத்தை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறைவு என்று ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலையில் 1057 பேர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Disqus Comments