Tuesday, October 1, 2013

புத்தளம் மாவட்டத்தில் மணல்குன்று மாணவி முதலிடம்

புத்தளம் மணல்குன்று அல்அஷ்ரக் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி எம்.எப்.எப். பஸ்லா 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 184 புள்ளிகளைப் பெற்று புத்தளம் மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் மணல்குன்று மன்பவுஸ் ஸாலிஹாத் புத்தளம் என்ற முகவரியைச் சேர்ந்த எம்.எப்.எம். பிர்தௌஸ், ஸைத்தூன் தம்பதிகளின் புதல்வி ஆவார். மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவியுடன் பாடசாலை அதிபரும் தந்தையும் படங்களில் காணப்படுகின்றனர்.

மணல்குன்று பாடசாலையில் 5 ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு 82 மாணவர்கள் தோற்றியதோடு அவர்களில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். (PO)
Disqus Comments