Tuesday, October 1, 2013

கிண்ணியாவில் கர்ப்பிணித் தாய் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

கிண்ணியாவில் இளம் கர்ப்பிணித் தாய் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

20 வயதான மூன்று மாத கர்ப்பிணியே உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணும் அவரது கணவனும் தங்கியிருந்த வீட்டில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மரணத்திற்கான காரணத்தை அறிவதற்காக இன்று பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

இதற்கமைய கிண்ணியா வைத்தியசாலையில் இருந்து சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். (NF)
Disqus Comments