வெள்ளைப் புறா விளையாட்டுக் கழகத்தின் 23ம் வருட பூா்த்தியை முன்னிட்டு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஈதுல் அழ்ஹா - தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பொருநாள் தினத்தன்று (16.10.2013) மாபெரும் விளையாட்டுப் போட்டியொன்றை வெகு விமரிசையாக நடாத்துவதற்கு எள்ளுச்சேனை வெள்ளைப் புறா விளையாட்டுக் கழகம் ஏற்பாடுகளைச்
செய்துள்ளது.
பெருநாள் தினமான எதிர்வரும் புதன்கிழமை நன்பகல் 2.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ள இந்த
விளையாட்டுப் போட்டியில் பல்வேறுபட்ட போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதோடு வெற்றி பெறும் வீரா்களுக்கு பெறுமதியான பரிசிகளோடு
நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்குவதற்கு ஏற்பாட்டுகள்
செய்யப்பட்டுள்ளன. புனித தியாகத்திருநாள் அன்று அனைவரும் வந்து
கண்டுகளிக்குமாறு ஏற்பாட்டுக் குழு மிக்க மகிழ்ச்சியுடன் அழைப்பு
விடுக்கின்றது.
ஏற்பாடு- வெள்ளைப் புறா விளையாட்டுக் கழகம்