Monday, October 21, 2013

தனியார் பஸ் ஊழியா்களை தாக்கியதால் ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத் தலைவர் பொலிஸில் சரண்

தனியார் பஸ் ஊழியர்கள் மூவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் தலைவர் ஜகத் சமந்த பெரேரா இன்று (21) பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் - கொழும்பு வீதியில் கடமையில் ஈடுபட்டுள்ள அதிசொகுசு பஸ் ஒன்றின் ஊழியர்கள் நேற்று (20) மஹவ நகரில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகினர்.

இவர்களை ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத் தலைவரே தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சிலாபம் - கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் நேற்று (20) பகல் தொடக்கம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் ஆஜரான பிரதேச சபைத் தலைவரை மாரவில மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாரவில தலைமையக பொலிஸ் பரிசோதகர் சந்தன ஹேரத் தெரிவித்தார்.
Disqus Comments