கண்டி - தெல்தெனிய - ஹிஜ்ராபுர பகுதி வீடொன்றில் நபர் ஒருவர் தனது கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (21) அதிகாலை 04.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
42 வயதுடைய பண்டாரம் சந்தனராஜா என்பரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணையும் பிரேத பரிசோதனையும் இன்று இடம்பெறவுள்ளன.
தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் இன்று (21) அதிகாலை 04.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
42 வயதுடைய பண்டாரம் சந்தனராஜா என்பரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணையும் பிரேத பரிசோதனையும் இன்று இடம்பெறவுள்ளன.
தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.