அமெரிக்காவின் பிரபல பொப்பிசைப் பாடகியான மடோனா பல ஆண்டுகளாக யூத மதத்தின் கப்பலாஹ்வை பின்பற்றி வந்த நிலையில், தற்போது புனித அல் குர் ஆனை கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளாராம்.
55 வயதான மடோனா, இசைத்துறையில் கொடிகட்டிப் பறந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் நிம்மதியைத் தேடி ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டுள்ளதாக கூறுகிறார்.
இவர் ரோமன் கத்தோலிக்கராக வளர்ந்தவர். ஆனால், 1996 ஆம் ஆண்டு அவர் யூத மதத்தின் கப்பலாஹ் பிரிவை பின்பற்றத் தொடங்கினார். கடந்த 17 வருடங்களாக கப்பலாஹ்வை பின்பற்றிய அவர், பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரான கை ரிச்சியை திருமணம் செய்தவுடன் கை ரிச்சியையும் கப்பலாஹ் பிரார்த்தனைகளில் பங்குபற்றச் செய்தார் மடோனா.
கை ரிச்சி, மடோனா திருமண வாழ்க்கை 2008 ஆம் ஆண்டு முறிந்த பின்னர் பிரேஸிலைச் சேர்ந்த ஜீசஸ் லஸ் எனும் 26வயது இளைஞரை மடோனா காதலித்தார்.
இவர் ரோமன் கத்தோலிக்கராக வளர்ந்தவர். ஆனால், 1996 ஆம் ஆண்டு அவர் யூத மதத்தின் கப்பலாஹ் பிரிவை பின்பற்றத் தொடங்கினார். கடந்த 17 வருடங்களாக கப்பலாஹ்வை பின்பற்றிய அவர், பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரான கை ரிச்சியை திருமணம் செய்தவுடன் கை ரிச்சியையும் கப்பலாஹ் பிரார்த்தனைகளில் பங்குபற்றச் செய்தார் மடோனா.
கை ரிச்சி, மடோனா திருமண வாழ்க்கை 2008 ஆம் ஆண்டு முறிந்த பின்னர் பிரேஸிலைச் சேர்ந்த ஜீசஸ் லஸ் எனும் 26வயது இளைஞரை மடோனா காதலித்தார்.
கடந்த சில வருடங்களாக தனது குழுவிலுள்ள 26 வயது நடனக் கலைஞரான பிரஹீம் ஸைபத் எனும் இளைஞரை மடோனா காதலிக்கிறார். பிரான்ஸ் நாட்டவரான பிரஹீம் ஸைபத் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில் மடோனாவும் இஸ்லாத்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளாராம்.
“அனைத்து புனித நூல்களையும் கற்றுக்கொள்வது அவசியம் என நான் எண்ணுகிறேன்” என்கிறார் மடோனா.
“இஸ்லாமிய நாடுகளில் சிறுமிகளுக்காக நான் பாடசாலைகளை நிர்மாணித்து வருகிறேன்.
“அனைத்து புனித நூல்களையும் கற்றுக்கொள்வது அவசியம் என நான் எண்ணுகிறேன்” என்கிறார் மடோனா.
“இஸ்லாமிய நாடுகளில் சிறுமிகளுக்காக நான் பாடசாலைகளை நிர்மாணித்து வருகிறேன்.
கடந்த காலத்தில் மடோனா கப்பலாஹ்வை பின்பற்றியபோது அவரின் நம்பிக்கை குறித்து யூத மதத் தலைவர்கள் பலர் கேள்வி எழுப்பியமை குறிப்பிடத்தக்கது. இதனால் விசனமடைந்த மடோனா, தான் நாஸிக் கட்சியில் இணைந்திருந்தால் இதைவிட குறைந்த சர்ச்சையே ஏற்பட்டிருக்கும் எனவும் அவ்வேளையில் கூறியிருந்தார்.
இதற்குமுன் 2008 ஆம் ஆண்டு மாலாவி நாட்டில் பாடசாலையொன்றை அமைப்பதற்கு மடோனா மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததுடன் அவருக்கு பெரும் சங்கடத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இதற்குமுன் 2008 ஆம் ஆண்டு மாலாவி நாட்டில் பாடசாலையொன்றை அமைப்பதற்கு மடோனா மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததுடன் அவருக்கு பெரும் சங்கடத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
லொஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட சர்வதேச கப்பலாஹ் நிலையம் எனும் தனது நலநிதியமொன்றின் ஊடாக இப்பாடசாலையை அமைப்பதற்கு மடோனா முயற்சித்தார். ஆனால் இத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பல மில்லியன் டொலர் பணம் ஆடம்பரமாக செலவிடப்பட்டதுடன் பாடசாலைக்கான ஒரு கல்கூட நடப்படவில்லை. ஆனால், அந்நல நிதியத்துக்கான இயக்குநர் சபையில் மடோனா அங்கம் வகிக்காததால் அவர் மீதிருந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பினார். இப்பின்னணியிலேயே தற்போது புனித அல் குர் ஆனை கற்றுக்கொள்வதுடன் இஸ்லாமிய நாடுகளில் சிறுமிகளுக்கான பாடசாலைகளை நிர்மாணித்து வருவதாக மடோனா கூறியுள்ளார்
(இன்ஷா அல்லாஹ் அன்னாருக்கு ஹிதாயத் கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோமாக!)
புனித அல் குர்ஆனை கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ள மடோனா