Friday, October 11, 2013

பாராளுமன்ற உறுப்பினா்கள் அழும் போது வழங்கப்படும் சூப்பியே பிரதியமைச்சர் பதவி - அநுர குமார(வீடியோ)

(NF)அமைச்சர்களின் மின்சார கட்டணம் இரண்டு உத்தியோகப்பூர்வ வாகனங்கள் மற்றும் எரிபொருளுக்காக மாதாந்தம் ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபா ஆகியவற்றை அரசாங்கமே செலுத்துவதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடொன்று கிடைப்பதாகவும் ''ஒரு அமைச்சரின் செலவானது, ஒரு மக்கள் தொகையொன்றை நடாத்துவதற்கான செலவாக'' காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர்களுக்குள்ள சலுகைகள், பிரதி அமைச்சர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என இந்த அரசாங்கம் சுற்று நிரூபமொன்றை வெளியிட்டுள்ளதாகவும் அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மக்களிடம் வரியை அறவிட்டு அமைச்சர்களுக்கு செலவிடுவதை இதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் ''குழந்தைகள் அழும்போது, சூப்பியை குழந்தையின் வாயில் வைக்கும் கதையாக இது காணப்படுவதாகவும் அமைச்சர்கள் அழுகின்றனர், அழுகின்ற போது வழங்கப்படுகின்ற சூப்பியே இந்த பிரதி அமைச்சர் பதவி'' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Disqus Comments