Sunday, October 20, 2013

இன்று காலை புழுதிவயல் அர்-ரஹ்மான் பள்ளிவாசலுக்கு அருகில் நடந்த வாகன விபத்து

இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 7.00 மணியளவில் விருதோடை புழுதிவயல் எல்லையான அர்-ரஹ்மான் தைக்கப் பள்ளிக்கு முன்பாக இடம்பெற்ற முச்சக்கரவண்டி  விபத்தில் ஒருவா் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் மயிரிலையில் உயிர் தப்பியுள்ளார். விருதோடையிலிருந்து வேகமாக வந்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப் பாட்டை மீறி பாதையோரம் இருந்த மரத்தில் மோதியதாலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. அதிஷ்டவசமாக முச்சக்கரவண்டி ஓட்டுநா் சிறு காயங்களுடன் உயிர் தப்பிதோடு முச்சக்கரவண்டி மிக மோசமாக சேதமடைந்துள்ளது.




Disqus Comments