Tuesday, August 19, 2014

சார்ஜாவில் இலங்கையர் தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்பு

சார்ஜாவில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு எமிரேட்ஸிலுள்ள அறையொன்றில் குறித்த இலங்கையர் தற்கொலை செய்து கொண்டுள்ளதை அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் கண்டு தெரிவித்ததாகவும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

குறித்த பணியாளரின் இறப்புக்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனைகளுக்காக இவரது சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Disqus Comments