Thursday, September 25, 2014

800/= க்காக 103 வயது பாட்டியை கொலை செய்த சிறுவன் கைது 103 வயது பாட்டியை கொலை செய்த சிறுவன் கைது

பலாங்கொடை - வலேகொட பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் தனது பாட்டியை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
13 வயதுடைய சிறுவன் தனது பாட்டியிடம் 800 ரூபாவினை கேட்ட போது பாட்டி கொடுக்காததால் பொல்லால் 3 தடவைகள் தலையில் தாக்கியதில் பாட்டி உயிரிழந்துள்தாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
 
சம்பவத்தில் 103 வயதுடைய பாட்டியே உயிரிழந்தவராவார்.
 
குறித்த  சிறுவனை  பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Disqus Comments