Sunday, January 4, 2015

583 வன்­முறை சம்­ப­வங்கள் அடங்­க­லாக 1073 முறைப்­பா­டுகள்

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனு தாக்கல் செய்­யப்­பட்ட தினத்­தி­லி­ருந்து இது­வ­ரையில் 13 துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வங்கள் அடங்­க­லாக 583 தேர்தல் வன்­முறை சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக நீதி­யா­னதும் சுதந்­தி­ர­மா­ன­து­மான தேர்­த­லுக்­கான மக்கள் இயக்­க­மான கபே அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் கீர்த்தி தென்­னகோன் தெரி­வித்தார்.
தேர்தல் வன்­மு­றை­களில் ஈடு­ப­டுவோர் குறித்து பொலிஸ் நிலை­யங்­களில் செய்­யப்­படும் முறைப்­பா­டு­க­ளுக்கு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­வ­தில்லை எனவும் இவ்­வா­றான நிலைமை தொடரும் பட்­சத்தில் தேர்தல் தின்­த­தன்று வன்­முறை சம்­ப­வங்கள் மேலும் அதி­க­ரிக்க வாய்ப்­புக்கள் உள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் வன்­மு­றைகள் குறித்து இது­வ­ரையில் மொத்­த­மாக 1073 முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. அவற்றில் நபர்கள் மீதான தாக்­குதல் மற்றும் அச்­சு­றுத்­தல்கள் குறித்து 79 முறைப்­பா­டு­களும், சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­வித்­தமை தொடர்பில் 28 முறைப்­பா­டு­களும், அரச சொத்­துக்கள் துஷ்­பி­ர­யோகம் மற்றும் நிய­ம­னங்கள் வழங்கல், இட­மாற்­றங்கள் போன்­றவை குறித்து 966 முறைப்­பா­டு­களும் பதி­வா­கி­யுள்­ளன.
தேர்தல் வன்­முறை சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் கைது செய்­யப்­ப­டு­கின்ற போதிலும் அவர்கள் சாதா­ரண குற்­றங்­களை இழைத்­த­வர்கள் போன்று விசா­ரணை செய்து விரைவில் விடு­விக்­கப்­ப­டு­கின்­றனர். இதனால் வன்­முறை சம்­ப­வங்­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் அச்­ச­மின்றி நட­மா­டு­கின்­றனர். இந்த நிலைமை மிகவும் மோச­மான வன்­முறை சம்­ப­வங்­க­ளுக்கு வித்­தி­டு­கி­றது.
கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லோடு ஒப்­பி­டு­கையில் இம்­முறை பாரி­ய­ள­வி­லான அரச சொத்­துக்­க­ளுக்கு துஷ்­பி­ர­யோகம் காணப்­ப­டு­கின்­றது. அத்­தோடு சட்­டத்தை மதிக்­காமல் அச்­ச­மின்றி வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வ­தா­னது சுதந்­தி­ர­மான தேர்­த­லுக்கு பெரும் அச்­சு­றுத்­த­லாக அமைந்­துள்­ளது. எனவே, அமை­தியை நிலை­நாட்டி நியா­ய­மா­னதும் சுதந்­தி­ர­மா­ன­து­மான தேர்­தலை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான சகல நட­வ­டிக்­கை­க­ளையும் எவ்­வித பாரா­பட்­ச­மு­மின்றி பொலிஸ் திணைக்­களம் மேற்­கொள்­ளப்­பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
Disqus Comments