Thursday, January 1, 2015

புத்தளத்தில் மைத்திரியின் கூட்டத்திற்கு வரலாறு காணாத மக்கள் வெள்ளம்



புத்தளம் ஹூதா பள்ளி சதுக்கத்தில் தற்போது நடைப் பெற்றுக்கொண்டிருக்கும்   பொது எதிரணியின் வேற்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்தில்  வரலாறு காணாத அளவில் மக்கள் வெள்ளமாக திரண்டுள்ளனர்.

போல்ஸ் வீதி , மரைக்கார் வீதி , குருநாகல் வீதி என்பவற்றில் கடும் வாகன் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும்  அங்கு கடமையில் போக்குவரத்து போலீசார்  ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இங்கு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம், அ.இ.ம.கா தலைவர் ரிஷாத் பதியுதீன், ஐ.தே.கட்சி வன்னி மாவட்ட பிரதம அமைப்பாளர் ஹுனைஸ் பாறூக், மத்தியமாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.






Disqus Comments