Wednesday, January 14, 2015

குரோஷியாவில் முதலாவது பெண் ஜனாதிபதியாக கொலிண்டா தெரிவு

குரோ­ஷி­யாவின் ஜனா­தி­பதி தேர்­தலில் எதிர்க்­கட்­சியை சேர்ந்த கொலிண்டா கிரபர் - கிரா­ரோவிக் வெற்றி பெற்­றுள்ளார்.
குறைந்த வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றுள்ள கொலிண்டா குரோ­ஷி­யாவின் முத­லா­வது பெண் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­க­வுள்ளார்.
அவர் மேற்­படி தேர்­தலில் 50.5 சத­வீத வாக்­கு­களைப் பெற்­றுள்ளார். அவ­ரது போட்­டி­யா­ள­ரான பதவி விட்டு விலகிச் செல்லும் ஜனா­தி­பதி ஐவோ ஜொஸி­போவிக் இந்தத் தேர்­தலில் 49.5 சத­வீத வாக்­கு­களை மட்­டுமே பெற்­றி­ருந்தார்.
தோல்­வியை ஏற்­றுக்­கொண்­டுள்ள ஜொஸி­போவிக், தேர்­தலில் வெற்றி பெற்­றுள்ள கொலிண்­டா­வுக்கு வாழ்த்­துக்­களைத் தெரி­வித்­துள்ளார்.
கொலிண்­டாவின் தேர்­த­லி­லான வெற்­றி­யா­னது குரோ­ஷி­யாவின் ஆட்சி, மத்­திய இடது சாரி கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வலது சாரி கட்­சிக்கு மாறு­வ­தற்­கான அடை­யா­ள­மா­க­வுள்­ளது.
மேற்­படி தேர்­த­ல் இந்த வருட இறு­தியில் நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்தல் தொடர்பில் பிர­தான கட்­சி­க­ளுக்­கான முக்­கிய பலப்­ப­ரீட்­சை­யாக நோக்­கப்­ப­டு­கி­றது.

முன்னாள் யூகோஸ்­லா­வி­யா­வி­லி­ருந்து 1991 ஆம் ஆண்டு குரோ­ஷியா விடு­தலை பெறு­வ­தற்கு பங்­க­ளிப்புச் செய்த குரோ­ஷிய ஜன­நா­யக ஒன்­றிய கட்­சியின் உறுப்­பி­ன­ரான கொலிண்டா (46 வயது), கடந்த காலங்­களில் வெளி­நாட்டு அமைச்­ச­ரா­கவும் நேட்டோ செய­லாளர் நாய­கத்தின் உத­வி­யா­ள­ரா­கவும் சேவையா­ற்­றி­யுள்ளார்.
தேர்தல் வெற்றியை­ய­டுத்து தலை­நகர் ஸக்­ரெப்பில் ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் உரை­யாற்­றிய கொலிண்டா, குரோ­ஷி­யாவை சுபீட்­சமும் செல்­வமும் அற்ற நாடென எவரும் கூறு­வ­தற்கு அனு­ம­திக்கப் போவ­தில்லை என சூளு­ரைத்­துள்ளார். அத்­துடன் பொரு­ளா­தார நெருக்­க­டியை களைய மக்கள் அனை­வரும் தேசிய மட்­டத்தில் ஐக்­கி­யத்­துடன் செயற்­பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
சட்ட நிபு­ண­ரான ஜொஸி­போவிக் 2010 ஆம் ஆண்­டி­லி­ருந்து குரோ­ஷி­யாவின் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்து வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.அவ­ரது மத்­திய இடது சாரி கூட்­ட­மைப்பு அரசாங்கமானது குரோஷியாவை 6 வருட கால பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கத் தவறியமையே அவரது தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.
குரோஷியா 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது.
Disqus Comments