Friday, February 27, 2015

வைத்தியர் சந்தமாலிக்கு 18 கோடி ரூபாய் நட்டஈடு வழங்க உத்தரவு

வைத்தியர் சமந்தா சந்தமாலிக்கு 18 கோடி ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு கொழும்பு மாவட்ட நீதவான் பிரதீப் ஹெட்டியாராச்சி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்ட 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கண்காட்சிக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரம் கலன்று விழுந்ததில் அப்போது வைத்திய மாணவியாக இருந்த சமந்தா சந்தமாலி, தற்காலிகமாக ஊனமுற்றார். 

இதுதொடர்பான வழக்கு கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்தநிலையிலேயே, பாதிக்கப்பட்ட மனுதாரான வைத்திய மாணவிக்கு (தற்போது வைத்தியர்) 18 கோடி ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் நிர்வாகத்துக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

Disqus Comments