காலி பஷார் வீதியிலுள்ள இலங்கை வங்கிக்கிளையின் சிரேஷ் முகாமையாளர் பி.டப்ளியு ஆரியசிறி (வயது 56), என்பவரின் சடலம் ஹிக்கடுவை கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக நாரிகம பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரியசிறி என்பவர் நேற்றிரவு 11 மணியிலிருந்து காணாமல் போயிருந்ததாக அவரது மனைவி, பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். அவர் அணிந்திருந்த சேர்ட் மற்றும் சாரத்தின் ஊடாகவே அவரது உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டினர்.
அவருடைய மரணம் சந்தேகமானது என்று பொலிஸார் தெரிவித்தனர்.