உலகில் புதுமையான பல கண்டுபிடிப்புகள் உலகையே கைக்குள் அடங்கிவிட்டதாக பலர் பாராட்டி வரும் அதே வேளையில் முறை தவறி பயன்படுத்தப்படும் இந்த கண்டுபிடிப்புகள் ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்பும் உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுதான் வருகின்றது. ஆனால், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தத பலர் வரம்பு மீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் பெரும்பாலும் விபரீதத்தில் தான் முடிகின்றன. கர்நாடக மாநிலம் மைசூரில் சமீபத்தில் நடந்தேறிய ஒரு விபரீதத்தை வெறும் செய்தியாக மட்டுமின்றி கருதாமல் ஒரு பாடமாகவும் இனிவரும் வேலையிலாவது நாம் இந்த தவரை திருத்திக் கொள்ள வேண்டும்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த சீதாராம் என்ற 18 வயது வாலிபர், வயிற்றுப் பிழைப்புக்காக கூலி வேலை தேடி மைசூர் நகருக்கு வந்துள்ளார். இங்குள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்தபடி, பணி நடைபெறும் கட்டிட வளாகத்தில் தங்கியுள்ளார். கடந்த மூன்றாம் தேதி இவரது செல்போன் ஒரு அழைப்பு வந்தது. சார்ஜர் மூலம் செல்போன் பேட்டரிக்கு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த நிலையில் அந்த அழைப்புக்கு பதில் சொல்லும் அவசரத்தில் சார்ஜர் இணைப்பில் இருந்து செல்போனை விடுவிக்காமலேயே ஆன் செய்து அவர் ஹலோ சொல்ல முயன்ற போது பயங்கர சத்தத்துடன் செல்போன் பேட்டரி வெடிகுண்டு போல் வெடித்து சிதறியது. இதில், அந்த நபரின் முகம் சிதைந்தது.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த நண்பர்கள் பணியாளர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட அவசரச் சிகிச்சையில் அவரது தொடை பகுதி தோலை எடுத்து முகத்தில் ஒட்டி தையல் போட்ட மருத்துவர்கள், கீழ் தாடை பகுதியின் முக்கிய எலும்பு சேதம் அடைந்து நொறுங்கி விட்டதால் முக சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்து விட்டாலும், முன்னர் இருந்த அந்த அழகிய முக அமைப்பை அந்த வாலிபர் மீண்டும் பெற பல லட்சம் ரூபாய் செலவும், பல ஆண்டு கால காத்திருப்பும் அவசியம் என தெரியவந்துள்ளது. இத்தனை ஆண்டு காத்திருப்புக்கு பதிலாக ஒரு நிமிடம் யோசித்து, சார்ஜர் இணைப்பில் இருந்து செல்போன் துண்டித்து விட்டு வந்த அழைப்புக்கு பதில் அளித்திருந்தால் அந்த நபருக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த துயரம் அந்த நபருடன் முடிந்துப் போகவும், உலகில் வேறு யாருக்கும் இந்த விபத்து நடைபெறாமல் இருக்க இந்த செய்தியை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்துவதுடன் நீங்களும் சார்ஜரில் செல்போன் இணைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் எந்த ஒரு அழைப்பு வந்தாலும் அழைப்பது எமனாக இருக்கலாம் என்பதில் கவனமாக இருங்கள்.
