மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சியலமர்த்துவதற்கான தீவிர முயற்சியின் இன்னொரு கட்டமாக ஸ்ரீலசுக ஆட்சிக்குட்பட்ட பிரதேச சபைகள் ஊடாகவும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் உஹன பிரதேச சபையில் மஹிந்தவே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என கட்சித் தலைமையை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதிருந்ததைத் தொடர்ந்து இன்ற கம்பஹாவிலும் அவ்வாறு இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில் மஹிந்தவுக்கு ஆதரவாக 10 லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் பணியிலும் மேல் மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பிலவின் கட்சி ஈடுபட்டு வருகின்றமையும் கட்சிக்காக ‘குற்றச் செயல்கள்’ புரிந்து சிறையிலடைக்கப்பட்டவர்களையும் சென்று மஹிந்த ராஜபக்ச பார்வையிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி - சோனகா்.கொம்.