புத்தளம் வடக்குக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட புத்தளம் சைனப் முஸ்லிம் பெண்கள் ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டிகளின்
இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திருமதி பெலஜியா
அபுல்ஹூதா தலைமையில் இடம்பெற்ற இந்த இறுதி நாள் நிகழ்வில் புத்தளம் நகர
சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி
வைத்தார்.கௌரவ அதிதிகளாக புத்தளம் கல்வி வலய தமிழ் பிரவுக்கான பிரதிப் பணிப்பாளர் Z.A. சன்ஹீர், பிரதிக்கல்விப் பணிப்பாளர் A. அனீஸ், புத்தளம் வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் A.C.M. மஹ்ரூப் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு இல்லங்களும் பெற்ற புள்ளிகனின் அடிப்படையில் ஹப்ஸா இல்லம் முதலிடத்தையும், ஆயிஷா இல்லம் இரண்டாமிடத்தையும், கதீஜா இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.




