(மதுரங்குளி நிருபர்) புத்தளம் றஹ்மத் நகரில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள ஜாமிஉ அஸாஸித் தக்வா ஜூம்ஆப் பள்ளிவாசல் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ கொத்துபாவுடன் திறந்து வைக்கப்படவுள்ளது. அஷ்ஷெய்க் கே. எம். எம். அஸ்ஹர் ஸலபி தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் முதலாவது ஜூம்ஆ உரையினை “மார்க்கத்தை மறந்த மனிதர்கள்” எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஏ. ஜே. எம். ஷாபி ஷஃதி நிகழ்த்தப்பட்டது..
அன்றைய தினம் அஸர் தொழுகையினைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளில் அஷ்ஷெய்க் ரஷ்மி ஷாஹித் அமீனி அவர்களின் “பெற்றோர்களே உங்களைத்தான்” எனும் தலைப்பில் விஷேட சொற்பொழிவும் இடம் பெற்றதாக ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்தனர்.
இந்நிகழ்வுகளில் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது.