இரு கைகளுமற்ற நபரொருவர் கைவிசிறிகளில் கால்களைப் பயன்படுத்தி சிக்கலான உருக்களை கச்சிதமாக வர்ணம் தீட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
ஷங்காய்க்கு அண்மையிலுள்ள நகரைச் சேர்ந்த பெயர் வெளியிடப்படாத ஓவியரே இவ்வாறு கால்களால் ஓவியம் வரைந்துள்ளார்.
அவர் தூரிகையை பாத விரல்களால் பிடித்து இந்த ஓவிய உருக்களை வரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
