புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மங்கள-எலிய பகுதியில் உப்பளம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை இடம்பெற்றது. முந்தல் சிறு கடற்றொழிலாளர்கள், இறால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொது மக்கள் என பல அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மங்களவெளி-சின்னப்பாடு மற்றும் புத்தளம் - கொழும்பு பிரதான வீதிகளின் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது.
பின்னர் ஸ்தலத்திற்கு முந்தல் பிரதேச செயலாளர் மற்றும் முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட அதிகாரிகள் வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட பின்னர் உப்பளம் செய்யப்படும் பகுதிக்கு அதிகாரிகள் உட்பட ஆர்ப்பாட்டக்காரர்களும் சென்று பாார்வையிட்டனர்.
பின்னர் முந்தல் பிரதேச செயலாளரினால் உப்பளம் மேற்கொள்ளப்படுவதை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டதோடு இந்த இடம் தொடர்பாக அறிந்து அனுமதியை வழங்குவதாகத் தெரிவித்தார்.