Monday, February 23, 2015

ISIS யாருடைய ஆட்கள்? மற்றுமொரு ஆதாரம்! வெளியானது


உலக முஸ்லிம்கள் லட்சக்கணக்கான பேர் இருந்து இறைவனை தொழுதாலும் சேர்ந்து தொழுவார்கள். அடுத்து கஃபா எந்த திசையில்இருக்கிறதோ அந்த திசையை நோக்கித்தான் தொழுவர். நம் முண்டாசுக் கவி பாரதி கூட 'திக்கை வணங்கும் துருக்கர்' என்று பாடினான். பாரதிக்கே தெரிந்த இந்த உண்மை ஐஎஸ்ஐஎஸ்யை தயாரித்த அமெரிக்க சிஐஏக்கும் இஸ்ரேலின் மொஸாத்துக்கும் தெரியவில்லை.



திருடன் எவ்வளவுதான் தடயங்களை அழித்து விட்டு சென்றாலும் ஏதாவது ஒன்றை அவசரத்தில் விட்டு விடுவான் என்று கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல் சிஐஏக்கும மொசாத்துக்கும் தொழுவது எப்படி என்று தெரிந்த அளவுக்கு ஒரே திசையை நோக்கித்தான் தொழ வேண்டும் என்ற உண்மை தெரியாமல் போய் விட்டது. ஐரோப்பா, அமெரிக்கா, இஸ்ரேல் என்று கூலிக்கு அழைத்து வரப்பட்ட ஆட்களுக்கு சரியான பயிற்சி இல்லாததால் ஆளுக்கொரு பக்கமாக திரும்பி தொழுது கொண்டிருக்கின்றனர்.


இவர்கள் உண்மை முஸ்லிம்களாக இருந்தால் அல்லவா இஸ்லாமிய சட்ட திட்டங்கள் சரிவர தெரிந்திருக்கும்? எனவே இது இவர்களின் தவறல்ல. சிஐஏ மொசாத் போன்ற நாசகார உளவு நிறுவனங்களின் தவறு. அவர்களின் அறியாமை இதிலும் வெளிப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் யார் என்பதை உலகுக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்கள் கழித்து பல உண்மைகளும் தானாக வெளிவரும். அது வரை பொறுத்திருப்போம்.



தகவல் : சுவனப் பிரியன்
Disqus Comments