Tuesday, March 17, 2015

கத்தரிக்காயின் மருத்துவக் குணங்கள்.

கத்­தி­ரிக்காய் உடல் வலியைப் போக்கும் தன்­மை­யு­டை­யது. காய்ச்­சலைப் போக்கக் கூடி­யது. சோர்வைப் போக்கக் கூடி­யது. வீக்­கத்தைத் தணிக்கக் கூடி­யது. கொழுப்பைக் குறைக்கக் கூடி­யது. ரத்த அழுத்­தத்தைக் குறைக்கக் கூடி­யது. ரத்த அணுக்கள் சேர்க்­கையைத் தடுக்கக் கூடி­யது. கண்­களின் ரத்த அழுத்­தத்தைக் குறைக்கக் கூடி­யது. மத்­திய நரம்பு மண்­ட­லத்தை அமை­திப்­ப­டுத்­த­வல்­லது, ஒவ்­வா­மையால் ஏற்­படும் மயக்க நிலையைத் தடுக்க வல்­லது, உறுப்­பு­களைத் தூண்ட வல்­லது. 100 கிராம் கத்­தி­ரிக்­காயில் 24 கலோரி மட்­டுமே ஊட்­டச்­சத்து அடங்கி இருப்­பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உத­வு­வ­தோடு ரத்­தத்தில் சேர்ந்­துள்ள அதி­கப்­ப­டி­யான கொழுப்புச் சத்தைக் குறைக்­கவும் இது மிகவும் உத­வி­யாக உள்­ளது.
புத்­து­ணர்வைத் தரும்
கத்­த­ரிக்­காயின் தோலில் உள்ள ஆன்த்தோ சயனின் என்னும் வேதிப்­பொருள் உடலின் சோர்வைப் போக்கிப் புத்­து­ணர்வைத் தரக் கூடி­யது. அது மட்­டு­மின்றி ஆன்தோ சையனின் புற்­றுநோய் எனப்­படும் கேன்சர் செல்­க­ளுக்கு எதி­ராகச் செயல்­பட்டு தடுக்க வல்­லது. கத்­திரி இலைகள் ஆஸ்­துமா எனப்­படும் இறைப்பு நோய், மூச்சுக் குழல் நோய்கள், சுவாச அறைக்­கோ­ளா­றுகள், வலி­யுடன் சிறுநீர் வெளி­யே­றுதல் ஆகி­ய­வற்­றுக்கும் மருந்­தாகிப் பயன் தரு­கின்­றது. வாயில் எச்சில் சுரக்­கவும் இது பயன்­ப­டு­கி­றது. கத்­தரிச் செடியின் வேர் மூச்­சி­ரைப்பு மற்றும் மூக்கில் தோன்றும் புண்­க­ளுக்கு மருந்­தா­கி­றது.
கொழுப்புச் சத்தைக் குறைக்கும்
வேரின் சாறு காது வலியைப் போக்கப் பயன்­ப­டு­கி­றது. நோய் வாய்ப்­பட்­டி­ருக்கும் போது பத்­திய உணவில் கத்­த­ரிக்காய் முக்­கிய பங்கு வகிக்­கி­றது. கத்­த­ரிக்­காயில் இருக்கும் நீர்ச்­சத்து மற்றும் பொட்­டா­சியம் சத்து ரத்­தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவும் ஓர் உன்­ன­த­மான மருந்­தாகும். கத்­த­ரிக்­காயில் உள்ள நார்ச்­சத்து பசியை அடக்கி வைப்­பதால் உடல் எடை குறை­வ­தற்கு உத­வு­கி­றது. மேலும் இத­யத்­துக்கு பலத்தைத் தரு­வ­தாக அமை­கி­றது. கத்­த­ரிக்­காயை எண்­ணெ­யி­லிட்டுக் காய்ச்சி மேல் பூச்­சாகப் பூசு­வதால் ரத்தக் கசிவு குண­மாகும்.
நார்ச்­சத்து
கத்­த­ரிக்­காயில் பல்­வேறு ஊட்­டச்­சத்­துக்கள் நிறைந்­தி­ருப்­பதால் உட­லுக்கு மென்­மையும், பலமும் தர­வல்­லது. கத்­தரிக்காயில் நார்ச்­சத்து மிகுந்து உள்­ளதால் மலச்­சிக்­கலைப் போக்­க­வல்­லது மட்­டு­மின்றி சர்க்­கரை நோயையும் தடுக்க வல்­லது. கத்­த­ரிக்­காயை அரைத்து தீநீ­ராக்கி வீக்­க­முற்ற கால்­களின் மீது தேய்த்­து­வர நாள­டைவில் வீக்கம் குறைந்து விடும்.கத்­த­ரிக்­காயைச் சாறு பிழிந்து உள்­ளங்கை மற்றும் உள்­ளங்­கால்­களில் தேய்த்து விட கால்­களில் வியர்த்து இடை­யூறு உண்­டா­வது தடுக்­கப்­படும். பழத்தை வேக வைத்து உள்­ளுக்குக் கொடுப்­பதால் காளான் சாப்­பிட்டு ஏற்­பட்ட நச்சு முறிந்து விடும். கத்­த­ரிக்­காயை வேக வைத்து அத்­துடன் போதிய பெருங்­காயம், பூண்டு, உப்பு சேர்த்து சூப் செய்து சாப்­பிட வயிற்றில் சேர்ந்து துன்பம் தரும் வாயு கலையும்.
நல்ல தூக்­கத்தை உண்­டாக்கும்
கத்­த­ரிக்­காயை வேக வைத்து அத்­துடன் போதிய தேன் சேர்த்து மாலை நேரத்தில் சாப்­பிட நல்ல தூக்­கத்தை உண்­டாக்கும் இன்­சோம்­னியா என்னும் தூக்­க­மின்மை அகலும். கத்­த­ரிக்­காயை நெருப்பில் சுட்டு வேக வைத்து போதிய சர்க்­கரை சேர்த்து சாப்­பிட மண்­ணீரல் வீக்­கத்தைக் குறைக்கும். காய்ச்­சலால் ஏற்­பட்ட மண்­ணீரல் வீக்கம் குறிப்­பாக அகலும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்­பி­டு­வது மிக்க நலம் தரும். கத்­த­ரிக்காய் அடிக்­கடி உணவில் சேர்ப்­பதால் இதயம் மற்றும் ரத்த நாளங்­களில் ஏற்­படும் நோய்கள் மற்றும் மார­டைப்பு தவிர்க்­கப்­படும். கத்­த­ரிக்­காயை அடிக்­கடி உணவில் சேர்த்துக் கொள்­வதால் அதி­லுள்ள குறைந்த அளவு நிகோட்டின் சத்து புகைப்­பி­டிக்கும் பழக்­கத்தை நிறுத்த வேண்டும் என்று நினைப்­ப­வர்­க­ளுக்கு துணை செய்யும்.
இதய பாது­காப்பு
கத்­த­ரிக்­காயில் அடங்­கி­யுள்ள சத்துப் பொருட்­களின் அழிவைத் தடுப்­ப­தோடு மூளைக்கு பலத்தைத் தந்து ஞாபக சக்­தியைத் தூண்டி விடு­கின்­றது. கத்­த­ரிக்­காயில் உள்ள வேதிப்­பொ­ருட்கள் உடலில் இரும்­புச்­சத்து உண்­டா­வ­தற்கும் அதனால் ரத்­தத்தில் உள்ள முக்­கிய பகு­தி­யான ஹீமோ­கு­ளோபின் அதி­க­மா­வ­தற்கும் உதவி செய்­கி­றது. கத்­த­ரிக்­காயில் அடங்­கி­யுள்ள நாசுமின் என்னும் வேதிப் பொருள் ரத்­தத்தில் சேர்ந்­துள்ள அதி­கப்­ப­டி­யான இரும்புச் சத்தைக் குறைத்து வெளி­யேற்ற உத­வு­கி­றது. இதனால் மார­டைப்பு தவிர்க்­கப்­டு­கி­றது. ரத்­தத்தில் சேர்ந்­துள்ள நச்­சுக்கள் வெளி­யேற்­றப்­ப­டு­வதால் இத்­தகு பாது­காப்பு இத­யத்­துக்கு ஏற்­ப­டு­கி­றது. கத்­த­ரிக்­காயை உணவில் சேர்த்துக் கொள்­வதால் செரி­மா­னத்தை அதி­கப்­ப­டுத்­து­வ­தா­கவும் துரி­தப்­ப­டுத்­து­வ­தா­கவும் அமை­கி­றது.
புற்று நோயைத் தடுக்கும்
கத்­த­ரிக்காய் சீரண உறுப்­பு­க­ளுக்கு பலம் தரு­வ­தாலும் மலத்தை வெளி­யேற்­று­வ­தாலும் மலக்­கு­டலில் ஏற்­படும் புற்று நோயைத் தடுப்­ப­தாக அமை­கி­றது.கத்­த­ரிக்காய் ஓர் நுண்­கி­ரு­மி­களைத் தடுக்க வல்­ல­தா­கவும் தொற்று நோய்­களைத் தவிர்க்க வல்­ல­தா­கவும் விளங்­கு­கி­றது. இதில் அடங்­கி­யுள்ள விட்­டமின் சி சத்து இதற்குத் துணை­யா­கி­றது. கத்­த­ரிக்­காயில் அடங்­கி­யுள்ள விட்­ட­மின்கள், மின­ரல்கள், அமி­னோ­ஆ­சிட்கள் மற்றும் நார்ச்­சத்­துக்கள் உடலை ஆரோக்­கி­ய­மாக வைக்க உத­வு­வ­தோடு தோல் ஆரோக்­கி­யத்­துக்கும் இது துணை செய்­கி­றது. தோல் மென்மையும் பளபளப்பும் பெற உதவுகிறது.
பல்வலி குணமாகும்
கத்தரிக்காயில் பொதிந்திருக்கும் ஆன்த்தோ சயானின் என்னும் வேதிப்பொருள் வயது முதிர்வைத் தடுத்து இளமைத் தோற்றத்துக்கு வகை செய்கிறது.
கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் தோலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுத்து தோல் ஆரோக்கியமாயிருக்க உதவுகிறது. கத்தரிப்பழத்தை ஊசியினால் குத்தித் துளைகள் செய்து நல்லெண்ணெய் இட்டு வறுத்து பல்வலிக்குக் கொடுக்க பல்வலி குணமாகும்.
Disqus Comments