மாவனெல்லை, அரநாயக்க- அம்பலங்கந்த பிரதேசத்தில், கூறிய ஆயுதத்தில் தாக்கி தந்தையை மகன் கொலை செய்த சம்பவமொன்று திங்கட்கிழமை(9) இரவு இடம்பெற்றுள்ளது. காணிப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதமே இக்கொலைக்கு காரணமாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தையடுத்து சந்தேக நபரான மகன் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவத்தில் 50 வயதான நபர் உயிரழிந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
