கட்டார் நாட்டின் அதிபர் ஷேய்க் தமீம் அவர்கள் இந்தோனேசிய முகாம்களில் தங்கி இருக்கும் ரோஹிங்க்யா முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் 50 மில்லியன் வழங்க உறுதி அளித்துள்ளார் என கல்ப் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்தோனேசியா வெளியுறவுத்துறை அமைச்சர் ரேத்னோ மர்சுடி அவர்களை சந்தித்து தோஹா நகரில் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்..
புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பும் அவர்களுக்காக 26 மில்லியன் தேவை என முறையீடப்பட்டு உள்ளது .
கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றும் வகையில் இந்தோனேசியா நாட்டிற்கு உலக நாட்டினர் உதவ வேண்டும் என
அந்நாட்டின் ஜனாதிபதி ஜோகோ வேண்டுகோள் வைத்துள்ளார் .
மேலும் விரிவான செய்திகளுக்கு கத்தார் நாளிதழ் கீழே கிளிக் செய்யவும்.
செய்திகள் -அபூஷேக் முஹம்மத்
