கண்டி நகரில் அமைந்துள்ள விடுதி ஒன்றுக்கு சென்றிருந்த பாடசாலை மாணவர்கள் ஐவரை கண்டி பொலிஸார் கைது செய்து கடுமையாக எச்சரிக்கை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
வெள்ளிக்கிழமை பகல் வேளையில் பாடசாலை மாணவர்கள் சிலர் சீருடையுடன் குறித்த விடுதியில் இருப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
கண்டி உதவி பொலிஸ் அதிகாரி எஸ்.பிரேமசிறி பதில் தலைமை பொறுப்பதிகாரி எதிரிசிங்க ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பொலிஸார் குறிப்பிட்ட விடுதிக்குச் சென்று சோதனையிட்டு ஐந்து மாணவர்களை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த கையடக்க தொலைபேசிகளையும் கைப்பற்றினர். விசாரணைகளின் பின்னர் பெற்றோர் முன்னிலையில் எச்சரிக்கை செய்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.