Tuesday, June 9, 2015

தேசிய கல்விக் கொள்கையை சீர்செய்ய வேண்டும் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

தேசிய மற்றும் சர்வதேசத் தேவைகளை அடையாளங்கண்டு தேசிய கல்விக் கொள்கையை சீர்செய்ய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (09) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
தேசிய கல்வி ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
தேசிய கல்வி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதி தெரிவித்ததாவது;
வெளிப்படையாக தொழில்நுட்பக் கல்லூரிகளைக் காணக்கூடியதாக உள்ள போதிலும், அங்கு அதிகளவிலான பாடநெறிகளைக் காண முடிவதில்லை. தொழில்நுட்பக் கல்லூரிகள் என்று கட்டடங்கள் இருக்கின்ற போதிலும் அதன் மூலம் சிறந்த பிரதிபலன் நாட்டிற்குக் கிடைக்கின்றதா என்பதனை சிந்திக்க வேண்டும். அண்மையில் நான் தழிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மாணவர்களை சந்தித்துப் பேசினேன். வட மாகாண தமிழ் மாணவர்கள் தமக்கு சிங்களம் கற்றுக்கொள்ள சிங்கள ஆசிரியர்கள் இல்லை என்று கூறினர். அதேபோன்று தமக்கு தமிழ் கற்றுக்கொள்ள ஆர்வமாகவுள்ள போதிலும் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என சிங்கள மாணவர்கள் என்னிடம் கூறினர்.
Disqus Comments