வில்பத்து சரணாலயத்துக்கு அருகில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம் சம்பந்தமாக சுற்றாடல் அமைப்புகள் தயாரித்த அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை கையளிக்கப் பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு சுற்றாடல் அமைப்பு இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது. இந்த விடயம் சம்பந்தமாக தாம் பல தரப்பினரிடம் அறிக்கை கோரியிருப்பதாகவும் அவற்றை துரிதமாக வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன் போது கூறியுள்ளார்.
அவ்வறிக்கைகள் கிடைத்த பின்னர் வில்பத்து சரணாலயத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்றம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.