பாடசாலை விடுமுறை நாட்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு பயன்படுத்தப்படுகின்ற பாடசாலைகளை தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
உயர் தரப் பரீட்சை நடைபெறுகின்ற பாடசாலைகள் செப்டெம்பர் 9 ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன.