Monday, July 13, 2015

நாம் வெற்றிபெற்ற பின்னா் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும் - ரணில் விக்ரமசிங்க


நல்லிணக்க செயற்பாடுகளின் ஒரு பகுதியாக பொதுத் தேர்தலில் பின்னர், மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். 


பிளவுபடாத இலங்கைக்குள் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க தமது அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 



2009ம் ஆண்டு போர் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்குமாறு, வலியுறுத்தப்பட்டு வருகின்றது. 



மேலும் தேர்தலின் பின்னர் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் அதன் உரிமையாளர்களுக்கு மீளளிக்கப்படும் எனவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 



(அத தெரண தமிழ்)
Disqus Comments