Thursday, July 9, 2015

மஹிந்த அப்பச்சி குருநாகல் மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியாம்.


முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, இந்த முறை பொதுத் தேர்தலில் குருநாகலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். 

இதற்கான வேட்பமனுவில் அவர் கைச்சாத்திட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பில் இடம்பெற்று ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார். 

மஹிந்த வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவார் அவரது ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்தார்.

இதற்கிடையில் முன்னிலை சோசலிச கட்சி காலி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. 

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை நாளை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் இதனைத் தெரிவித்துள்ளார். 
Disqus Comments