Monday, April 25, 2016

காது குடையும் பழக்கம் உடையவரா? அப்படியாயின் இதனையும் ஓரு முறை வாசியுங்கள்.


தினமும் சுத்தம் செய்வது 
உண்மையில் நீங்கள் தினமும் காதை குடைந்து சுத்தம் செய்வது காதுகளுக்கு நல்லது என எண்ண வேண்டாம். உண்மையில் இந்த லைசோசைம்கள் தான் காதுகளை பாதுகாக்கின்றன என மேலும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உண்மையில் குளிக்கும் போது காதுகளின் மேற்புறத்தில் நீர் ஊற்றி கழுவி, மென்மையான துணியைக் கொண்டு காதின் மேற்புறத்தில் மட்டும் சுத்தம் செய்தாலே போதுமானது.

காதுகளில் பஞ்சு வைப்பது 
சிலர் காதுக்குள் அழுக்கு போகாமல் இருக்கவும், குளிர் காலத்தின் போதும் கூட பஞ்சு வைத்துக் கொள்வார்கள். ஒருவேளை அந்த பஞ்சு காதின் உட்பகுதிக்குள் சென்றுவிட்டால் அதை மருத்துவ முறையை கையாண்டு அகற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம்.


காதுகளில் பஞ்சு வைப்பது மேலும், காதுக்குரும்பி (Ear wax) எனப்படுவதை இது காதினுள்ளே அடைப்பு போலே உண்டாக செய்கிறது. இது செவிப்பறையை பாதிக்க கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குச்சி போன்ற பொருட்களை பயன்படுத்துவது 
சிலர் காது குடைவதை சுகமான வேலையாக செய்து வருவார்கள். பேனா, கறிவேப்பிலை குச்சி, விரல் நகம், போன்றவற்றை பயன்படுத்தி காது குடைவார்கள். உண்மையில் இது சுகமாக இருப்பினும், காதின் உள்ளே இருக்கும் சருமத்தை அதிகமாக எளிதாக பாதிக்கின்றனர் என்பது தான் உண்மை.

நீரை உள்ளே ஊற்றுவது 
சிலர் காதை நன்கு கழுவுகிறேன் என்ற பெயரில் காதினுள்ளே தண்ணீரை நேராக ஊற்றிக் கொள்வார்கள். இப்படி செய்வதில் எந்த தவறும். ஆனால், அதே சமயம் உள்ளே ஊற்றிய தண்ணீர் முழுதுமாக காய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். இப்படி நீரை நீராக காதினுள் ஊற்றி கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லவே இல்லை.

பின்னூசி காது குடைய பின்னூசி
பெண்கள் பயன்படுத்தும் ஹேர் பின் போன்றவற்றை தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம். இது செவிப்பறை மற்றும் காதின் உட்பகுதியில் இருக்கும் மிர்துவான சருமத்தில் எளிதாக கிழிசல் உண்டாக்கிவிடும்.



Disqus Comments