Friday, April 22, 2016

இலங்கையின் அரசியலமைப்பு வெளிநாட்டவர்களின் முதலீட்டுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கிறது - அமைச்சர் ரிஷாட்

வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மீதான பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொண்ட நாடுகளில்ஒன்றாக இலங்கை திகழ்கின்றதுமற்றும் முதலீட்டாளர்களை பாதுகாக்க பொறிமுறைகள்பல உள்ளனஇலங்கையின் அரசியலமைப்பும் வெளிநாட்டவர்களின் முதலீட்டுக்குபாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கிறது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட்பதியுதீன் தெரிவித்தார்.
 
கடந்த வாரம் டுபாய் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற மூன்று நாள் கொண்ட 2016ஆம் ஆண்டுக்கான வருடாந்த முதலீட்டு கூட்டத்தில் கலந்துக்கொண்டுஉரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார்.
 
உலகத்தலைவர்கள்அரச அதிகார்pகள்அமைச்சர்கள்வர்த்தக பிரதிநிதிகள்,முதலீட்டாளர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்துக்கொண்ட இக் கூட்டத்தில் அமைச்சர்ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது:
 
நாட்டின் நிரந்தர சமாதானம் மற்றும் நிலையான பொருளாதாரம் நிலவும் நிலையில்சுற்றுலா துறைஉற்பத்தி சேவை துறைதகவல் தொழில்நுட்பத் துறைவிவசாயம்போன்ற  பல துறைகள் மீது முதலீட்டு வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
 
டுபாய் நாட்டின் வருடாந்த முதலீட்டு கூட்டம்   உலகத்தலைவர்கள்அரச அதிகார்pகள,;அமைச்சர்கள்வர்த்தக பிரதிநிதிகள் உட்பட பல பிரமுகர்களை சந்தித்து தொன்மைவாய்ந்தமுதலீட்டு வாய்ப்புக்களை விவாதிக்க தளம் உருவாக்கப்பட்டுள்ளதுஇக் கூட்டத்தில்இலங்கைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
 
கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து  நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் நான் பங்கேற்றிவருகின்றேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்இதன் மூலம் எனக்குநல்ல அனுபவம் கிடைத்துள்ளதுடன் உலகத்தலைவர்கள் ஊடாக ஒரு வளைப்பின்னல்ஏற்பட்டுள்ளதுஇலங்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கிடைக்கக்கூடியநம்பிக்கையான பல்வேறு  முதலீட்டு வாய்ப்புக்கள் காணப்படுகின்றதை தெளிவாகமுன்வைத்துள்ளேன்.  
 
ஐக்கிய அரபு  நாடுகள் இலங்கையின் மிகப் பெரிய முதலீட்டாளாக காணப்படுகின்றன.அண்மையில் இந்நாடுகள் ஆட்டோமொபைல்தொலைத் தொடர்புஉற்பத்திஹோட்டல்தொழில்சுற்றுலா துறை முதலியனவற்றில் முதலீடு செய்துள்ளனர்எனது அமைச்சுசாத்தியமான முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வமாக தேவையானவழிகாட்டல்கள் மற்றும் உதவி வழங்கும்.
 
இலங்கையின் பெரிய வர்த்தக பங்காளியாக இருக்கும் ஐக்கிய அரபு நாடுகளின் இரு தரப்புவர்த்தகம் 2015 ஆம் ஆண்டில் 1.35 பில்லியன் அமெரிக்க டொலராக எட்டப்பட்டது.ஐக்கிய அரபு நாடுகளின் சந்தையில் நுழைய  இலங்கை நிறுவனங்கள் பல ஆர்வமாகஉள்ளன.
 
2016 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையே இருதரப்பு வர்த்தகத்தின் முடிவுகள் சிறந்த   முன்னேற்றத்தை எட்டும் என்று நான்நம்புகிறேன்.
 
ஐக்கிய அரபு நாடுகளின் 2020 ஆண்டில் எக்ஸ்போ வர்த்தக சந்தையில் இலங்கை ஒருவலுவான ஆதரவாளர்இலங்கையின் வர்த்தகம்முதலீடு மற்றும் சுற்றுலா துறையினைஊக்குவிக்க எக்ஸ்போ வர்த்தக சந்தையில் பெரிய அரங்களை அமைத்து அதனைசாதகமாக பயன்படுத்தி உலக நாடுகள் மத்தியில தகுதிபெற செயல்படுவோம்.
 
இலங்கையின் பொருளாதாரம் அண்மையில்  திருப்திகரமான அளவில்  6மூ சத வீதவளர்ச்சி கண்டுள்ளது.
 
சர்வதேச சந்தையில் பொருளாதார நிலைமை பாதிப்படைந்த  போதிலும்இலங்கைபொருளாதாரம்ஏற்றுமதி மற்றும் சுற்றுலா திருப்திகரமான வளர்ச்சியை கண்டுள்ளது.வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் தொழிலாளர்களால் அனுப்பும் பணம் இலங்கையின்ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் பாரிய பங்களிப்பு செய்துள்ளதுநாங்கள் மேலும்வேலை வாய்ப்புகளை உருவாக்கவுள்ளோம்மற்றும் எங்கள் உற்பத்தி துறை முந்தையஆண்டுகளில் விட சிறப்பாக செயல்பட முன்னெற்பாடாக இருக்கினறோம்இதுஇலங்கைக்கு மேலும் வெளிநாட்டு நேரடி முதலீடு ஓட்டத்தினை ஏற்படுத்தும் எனஎதிர்பார்கின்றோம்.
 
உலக சந்தையின் சரிவு இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை சிறியளவில்பாதிப்படைய செய்கிறது.
 
எண்ணெய் விலை மாற்றத்தினால் ரஷ்யர் மற்றும்  மத்திய கிழக்கு சந்தைகளில் எங்கள்முக்கிய ஏற்றுமதி பொருளான  தேயிலை ஏற்றுமதியில் சில சிரமங்களை சந்திக்கநேரிடுகிறதுஆனால் இவை குறுகிய கால இடையூறுகள் நீண்ட காலம் நீடிக்காது என்றுநான் நினைக்கின்றேன்எனவே  பெரிய பொருளாதாரங்களினை இலங்கை போன்றநாடுகள் மீண்டும் செயல்படுத்தி உலகப் பொருளாதாரத்தில் வேகமாக மீள் பயனடையமுடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
 
இதேவேளை ஆசியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைக்கும் நாடுகளின்வரிசையில் இலங்கை முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்படுவதுடன்நேரடி முதலீடுகள்கிடைக்கும் நாடுகளின் வரிசையில் முதல் பத்துக்குள் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.
 
இலங்கையைத் தவிரசீனாஇந்தியாஇந்தோனேசியாமலேசியாவியட்நாம்,பிலிப்பைன்ஸ்மியன்மார்தாய்லாந்துபங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளும்உள்ளடங்குகின்றனஅதுமாத்திரமன்றி தெற்காசிய வலய நாடுகளில் இலங்கை மற்றும்பங்களாதேஷ் ஆகிய நாடுகள் அதிகளவு வளர்ச்சியை பதிவு செய்யும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது

CONCLUDED

Media 
Ministry of Industry & Commerce 


Disqus Comments