Monday, May 9, 2016

பாடசாலையில் மதில் உடைந்து விழுந்ததில் 16 பேருக்கு காயம் (படங்கள்)


ஊவா மாகாணத்தின் பதுளை, லுணுகல, அல் – அமீன் முஸ்லிம் வித்தியாலத்தின் மதில் ஒன்று நேற்று மாலை சரிந்து விழுந்ததில், பாடசாலைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லுணுகல பொலிஸார் தெரிவித்தனர். 

பாடசாலையில் இடம்பெற்ற மேலதிக வகுப்புக்கு வந்திருந்த மாணவர்களே இந்த அனர்த்தத்தில் சிக்கிக்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

பாதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வர், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லுணுகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

(அத தெரண Tamil)
Disqus Comments