Sunday, May 8, 2016

சிலாபம் வைத்தியசாலையில் தாதிமார்களிடையே சண்டை - அதே வைத்தியசாலையில் சிகிச்சை


சிலாபம் பொது வைத்தியசாலையில் பணியாற்றும் இரண்டு தாதியர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. 

தாதியர்களை கடமைகளுக்கு இணைத்துக் கொள்வது தொடர்பில் இன்று பகல் இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. 

சிலாபம் வைத்தியசாலையின் பிரதான தாதி ஒருவரும் விஷேட தர தாதி ஒருவரும் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். 

தற்சமயம் இருவரும் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களுக்கிடையிலான பிரச்சினை குறித்து வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரி மற்றும் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


(அத தெரண தமிழ்)
Disqus Comments