Saturday, December 10, 2016

சொந்தத் திருமணத்தை சவூதியிலிருந்து இணயைம் மூலம் பார்த்த வெளிநாட்டு மாப்பிள்ளை - நடந்தது இது தான்!!!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடந்த திருமணத்திற்கு சவுதியில் இருந்த மணமகன் வரமுடியாததால் அவரது சகோதரி மணமகளுக்கு தாலி கட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு ஊருக்கு வர விடுப்பு கிடைக்காததால் மணமகன் கேரளாவில் நடைபெற்ற தனது திருமணத்தை சவுதி அரேபியாவில் இருந்தபடியே இன்டர்நெட்டில் நேரலையாக பார்த்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

கொல்லம் அருகே வெளியம் பகுதியைச் சேர்ந்தவர் பாரிஸ்(28). இவர் சவுதியில் இருந்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இவர் பணிபுரிந்த நிறுவனத்தின் மீது சில புகார்கள் அரசுக்கு சென்றதால் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த அனைத்து வெளிநாட்டு ஊழியர்களது விசா மற்றும் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.

இதனால் பாரிசுக்கு ஊருக்கு வரமுடியவில்லை. பின்னர் தனது நண்பர்களை தொடர்பு கொண்ட பாரிசு, தான் திருமணத்திற்கு வர இயலாது என தெரிவித்தார்.

ஆனாலும் தனது திருமணத்தை சவுதியில் இருந்து இன்டர்நெட்டில் நேரடியாக பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளார். அதற்கு நண்பர்களும் சம்மதித்து பாரிசின் திருமணத்தை அவரே நேரடியாக காணும்படியாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து திருமணத்தை சிறப்பாகவும், இப்படியொரு ருசிகர சம்பவமாக நடத்தியுள்ளனர்.

Disqus Comments