Sunday, February 5, 2017

பெப்ரவரி முதல் பொலிஸாரின் சம்பளம் 40 வீதத்தால் அதிகரிப்பு!


பொலிஸ் அதிகாரிகளின் 40 வீத சம்பள அதிகரிப்பு பெப்ரவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் என்று பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது. 

அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் சம்பளத்தை 40 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நூற்றுக்கு 17 வீதமான அளவு 2016 ஜனவரி முதல் வழங்கப்பட்டு வந்துள்ளது. 

மீதி 23 வீத சம்பள அதிகரிப்பை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகரம் வழங்கியுள்ள நிலையில், அதனை பெப்ரவரி மாதம் முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது. 

அத்துடன், 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கான அடிப்படை சம்பளத்தில் நூற்றுக்கு 40 வீதமான அதிகரிப்பு, கொடுப்பனவு என்ற வகையில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 
Disqus Comments