2017ம் வருடத்துக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடைபெறும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில், உயர்தரப் பரீட்சை 2 ஆயிரத்து 230 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன் இந்தப் பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 227 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
அதேபோன்று, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, 3 ஆயிரத்து 14 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன் இதில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 மாணவர்கள் தோற்றவுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.