Tuesday, October 28, 2014

உதைபந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டவர் மரணம் - பதுளையில் சம்பவம்

உதைபந்தாட்ட போட்டியொன்றில் பங்கு கொண்டு திடீரென மயங்கி விழுந்த நபரொருவர் பதுளைப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹாலி-எல பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியொன்றின் போது இவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹாலி-எல உணுகொல்ல தோட்டத்தைச் சேர்ந்த சிவனேஸ்வரன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பதுளைப் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேதப் பரிசோதனையையடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Disqus Comments