இரு நாய்களுக்கு சுமார் 100 விருந்தினர்கள் முன்பாக கோலாகலமாக திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் இந்தோனேசியாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பல்ஸ் என்ற ஆண் நாய்க்கும் யிப்பா என்ற பெண் நாய்க்கும் மனடோ நகரிலுள்ள மெகா டிரேட் நிலையத்தில் திருமணம் செய்துவைக்கப்பட்டது.
மணமகளான யிப்பா வெள்ளை நிற திருமண ஆடையையும் மலர்களாலான கிரீடத்தையும் அணிந்திருந்த அதேசமயம், மணமகனான பல்ஸ் திருமண மேலாடையையும் மூக்குக் கண்ணாடியையும் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த திருமணத்தின் போது நாய்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட திருமண கேக் வெட்டப்பட்டு பரிமாறப்பட்டது.
