Tuesday, February 24, 2015

ஷசி வீரவங்சவுக்கு 25ம் திகதிவரை விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவியான ஷசி வீரவங்சவை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
முன்னாள் அமைச்சரின் மனைவி, 2010ஆம் ஆண்டு, பொய்யான தகவல்களை கொடுத்து இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்த கடவுச்சீட்டு 2009ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி காலாவதியான அவரது சாதாரண கடவுச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அதில் அடங்கியுள்ள தகவல்கள் வித்தியாசமானதாக காணப்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

Disqus Comments