Wednesday, February 11, 2015

புதிய அரசாங்கள் பயங்கரவாத அமைப்புகளுக்கு தீனி போடுகின்றது - ஞானசார

புதிய அரசின் செயற்­பா­டு­க­ளா­னது சர்­வ­தேச மற்றும் உள்­நாட்டு பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுக்கு போஷனை அளிக்கும் வகையில் காணப்­ப­டு­வ­தாக குற்றம் சுமத்தும் பொது பலசேனாவின் பொது செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் இத்­த­ரு­ணத்தில் எமது நாட்டின் அனைத்து மக்­களும் மிகவும் அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்டும் எனவும் தெரி­வித்தார்.
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டில் 13 ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்த தயராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைக்கு எமது நாட்டை கொண்டு போகவா எமது இராணுவ வீரர்கள் உயிர் நீத்தார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கிரு­லப்­ப­னையில் அமைந்­துள்ள பொது­பல சேனா அமைப்பின் அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அமைப்பின் பொது செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இதன்­போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
எமது நாட்டில் மலர்ந்­தி­ருக்கும் புதிய அரசின் தொடர்ச்­சி­யான கடந்த கால செயற்­பா­டு­க­ளா­னது சர்­வ­தேச ரீதியில் செயற்­படும் பயங்­க­ர­வாத சக்­தி­க­ளுக்கும் உள்­நாட்டு பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுக்கும் தமது செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு மன ரீதி­யாக தம்மை தயார்­ப­டுத்தி கொள்­ளவும் தடை­யின்றி தமது செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­கான ஒரு சூழ்­நிலை புதிய அர­சினால் தோற்றம் பெற்­றுள்­ளதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.
இன்று சர்­வ­தேச ரீதி­யாக தொழிற்­படும் தலிபான் அல்­கொய்தா போன்ற பயங்­க­ர­வாத அமைப்­பி­னது் செயற்­பா­டுகள் அதி­க­ரித்து காணப்­ப­டு­வதை அனைத்து மக்­களும் உணரக் கூடி­ய­தாக உள்­ளது. இது தொடர்பில் எமது அமைப்­பினர் எமது நாட்டின் அனைத்து மக்­க­ளையும் பாது­காக்கும் முக­மாக கடந்த காலங்­களில் நட­வ­டிக்கை எடுக்க கூறிய போது எம் மீது குறிப்­பிட்ட சில தரப்­பினர் நாட்டின் மத பிரி­வினை வாதத்தை தூண்­டு­வ­தா­கவும் மக்­க­ளி­டையே ஒற்­று­மையை சீர்­கு­லைப்­ப­தா­கவும் பல்­வேறு வகையில் சேறுபூசினர்.
கடந்த காலங்­களில் பேரு­வளை அளுத்­க­மவில் அரங்­கேற்­றப்­பட்ட வன்­மு­றை­க­ளுக்கு பொது­பல சேனா அமைப்­பி­னரே காரணம் என பல்­வேறு தரப்­பி­ன­ராலும் இது­வரை சேறுப்­பூசப்­பட்டு வரு­கின்­ற­மை­யா­னது அர்த்­த­மற்­றது.
நாம் புதிய அர­சுக்கு கூறிக்­கொள்­வது என்­ன­வென்றால் எம்­மீது ஆதாரம் அற்ற குற்­றங்­களை பரப்பி சேறுப்­பூசு­வதை தவிர்த்து கடந்த இரண்டு வருட காலங்­களில் பேரு­வளை வன்­முறை சம்­பவம் உட்­பட முஸ்லிம் பள்­ளி­வாசல் விவ­காரம் போன்­றவை தொடர்பின் விசா­ர­ணை­களை நடத்­து­மாறு கோரு­கின்றோம். அதற்கு நாம் எமது முழு ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் வழங்­கு­வ­தற்கு தயா­ராக உள்ளோம். வெறு­மனே ஆதா­ரங்கள் அற்ற குற்­றங்­களை சுமத்­து­வதா புதிய அரசின் நல்­லாட்சி?
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டில் 13 ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்த தயாராக உள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளமை தொடர்பில் நாம் கடந்த காலங்களில் அறியப்பெற்றிருந்தோம் இவ்வாறான நிலைக்கு எமது நாட்டை கொண்டு போகவா எமது இராணுவ வீரர்கள் உயிர் நீத்தார்கள்? எனவே மக்கள் மனதில் எழுந்திருக்கும் குழப்பநிலையை போக்க புதிய அரசானது பொதுதேர்தலை நடத்துவது சிறந்தது என தெரிவித்தார்.
Disqus Comments